ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பணத்திற்கு நடந்தது என்ன? வெளிவந்த பகீர் தகவல்
investigation
money
easterattack
omalpe sobitha thero
By Sumithiran
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்தஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கென பெறப்பட்ட வெளிநாட்டு உதவிகளில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ரூபா முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலொன்றை வெளியிட்டுள்ளார் ஒமல்பே சோபித தேரர்.
எனவே இந்த பணத்திற்கு நடந்தது என்ன என்பதை கண்டுபிடிக்க கோரி சி ஐ டியிடம் தேரர் முறையிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் 2019 இல் மூன்று தேவாலயங்கள் மறறும் முன்னணி ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்து 500 ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் பெருமளவானோர் நிரந்தரமாக ஊனமடைந்திருந்தனர்.
உயிரிழந்தவர்களில் 45பேர் வெளிநாட்டவர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி