இலங்கையை விட்டு வெளியேறும் இலட்சக்கணக்கானோர் - வெளியாகிய தகவல்
நெருக்கடி
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் பலர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு தேடி செல்கின்றனர்.
அதேநேரம் மேலும் சிலர் தமது உயிரைப் பணயம் வைத்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக படகுகளில் தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் கடந்த எட்டு மாதங்களில் 140,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த வருடம் மேலும் 300,000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஏ.விமலவீர தெரிவித்தார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,

