பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவுறுத்தல்
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடையைக் குறைக்குமாறு பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்ட போதிலும் சில பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை கல்வி அமைச்சின் (Ministry of Education) சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவின் பணிப்பாளர் கங்காதில்ஹானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் எடையை குறைப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் சுற்றறிக்கை மூலம் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
பாடசாலை மாணவர்களின் புத்தகப்பை
இதனையும் மீறி சில பாடசாலைகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் அதிகளவான புத்தகங்களை பாடசாலைக்குக் கொண்டு வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் பிரகாரம் பாடசாலைகளுக்கு கண்காணிப்பு குழுக்களை அனுப்பி புத்தகபைகளின் எடை தொடர்பில் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி, பாடசாலை மாணவர்களின் புத்தக பையின் எடை பதினைந்து முதல் இருபது கிலோ அல்லது அதற்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.
கல்வி அமைச்சு
இதன்படி, முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை 2 கிலோவாகவும் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை 3 கிலோவாகவும் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை 4 கிலோவாகவும் இருத்தல் வேண்டும்.
10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை 7 கிலோவாக இருத்தல் வேண்டும் என கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
