ரணிலுக்கு கிடைத்த அமெரிக்காவின் பாராட்டு
நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் பாராட்டு கிடைத்துள்ளது.
அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஐலின் லொவபக்கர் அதிபரை சந்தித்த போதே அமெரிக்க அரசாங்கத்தின் பாராட்டுகளை அதிபரிடம் தெரிவித்தார்.
ஐலின் லொவபக்கர் ( Eileen Laubacher) இன்று (11) அதிபர் அலுவலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார்.
இலங்கை - அமெரிக்க உறவு
இதன்போது, இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதாரத் திட்டங்கள் குறித்து லொவபக்கருக்கு விளக்கமளித்த அதிபர், போதைப்பொருள் கடத்தலை தடுப்பது மற்றும் அந்த நோக்கத்திற்காக கடல்சார் ஒத்துழைப்பைப் பெறுவது தொடர்பிலும் கலந்துரையாடினார்.
இலங்கையின் கூட்டிணைவை அமெரிக்கா பாராட்டுகின்ற அதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாகவும் லொவபக்கர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
