எக்னெலிகொடவை கொலை செய்து தீவில் புதைத்த கடற்படையினர்! கட்டவிழ்க்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் மர்மங்கள்

Navy Day Sri Lanka Navy Prageeth Eknaligoda
By Dharu Jul 15, 2025 02:33 PM GMT
Report

ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் வழக்கு, இலங்கையில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அரசின் பொறுப்புக்கூறல் இன்மை குறித்து சர்வதேச அளவில் கவனத்தை இன்றளவும் வெளிப்படுத்தி வருகிறது.

சர்வதேச மன்னிப்பு சபை மற்றும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஆகியவை நீதிக்காக குரல்கொடுத்த ஒரு முக்கிய வழக்காக எக்னெலிகொடவின் வழக்கு காணப்படுகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு விவகாரத்தை சர்வதேசம் கவணித்துவரும் நிலையில் தென்னிலங்னை ஊடகம் ஒன்று நடத்திய நேர்காணலில் அம்பலமான தகவல்கள் அதிர்ச்சிமிக்கவாய் அமைந்திருந்தன.

ஊடகவியலாளர் எக்னெலிகொட எவ்வாறு கொலை செய்யப்பட்டார், அவர் கொலை செய்யப்பட்ட இடம், அந்த தகவல் எவ்வாறு வெளிவந்தது என்ற பல விடயங்கள் இதன்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டு இறுதியில் நியூசிலாந்துக்கு தொழில் விசாவில் சென்று அரசியல் தஞ்சம் கோரிய முன்னாள் கடற்படை வீரரான பிரசன்ன பியசாந்தவே இந்த விடயங்களை கட்டவிழ்த்துள்ளார்.

2010 ஆண்டு கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட(prageeth Eknaligoda) சுட்டுக் கொல்லப்பட்டதையும் அவரின் சடலத்தையும் தான் கண்டதாகவும் அச்சந்தர்ப்பத்தில் அங்கு இருந்தாக கடற்படை வீரர் விளக்கமிளித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்ட விடயங்களை அபம்பலப்படுத்திய அவர், பின்வரும் விடயங்களையும் கூறியுள்ளார். “2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் 2 நாட்டுகளுக்கு முன் எக்னெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்த விட்டன.

2010 ஆம் ஆண்டு தான் திருகோணமலையில் கடமையாற்றும் போது ஒருநாள் இரவு 8 மணிக்கு உயரதிகாரிகளின் கட்டளையின்படியும், கொமோன்டோ ரவீந்திர விஜயபுர ஆணையின் படியும், இரவு 11 மணிக்கு, கொழும்பு கடற்படை தலைமையகத்துக்கு கெப் வாகனத்தில் அழைத்து வரப்பட்டேன் அச்சந்தர்ப்பத்தில் தனக்கு சரியான திகதிகள் நினைவில் இல்லை.

குறிப்பாக பெப்ரவரி 01 அல்லது 02 ஆம் திகதிகளில் இந்த சம்பவம் நடந்திருக்க கூடும். தலைமையகத்திற்கு வந்த தினத்தன்று இரவு தன்னை மீள கெப்வண்டியில் ஏற்றிக் கொண்டு சுநேத்திரா தேவி பிரிவெனா பகுதிக்கு அழைத்து சென்றனர்.

இந்நநிலையில் அங்கு கெப் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டது. அப்போது தான் பயனித்த வாகனத்துக்கு முன் கறுப்பு நிற கெப்வண்டி நிறுத்தப்பட்டிருந்ததது. அந்த வண்டியில் கண்கள் கைகள் கட்டப்பட்ட நபர் ஒருவர் ஏற்றப்பட்டார்.

அதன் பின்னர் அந்த கெப்வண்டி அங்கிருந்து சென்றது. பின்னர் நாங்கள் வந்த கெப்வண்டி அபரண நோக்கி அதன் பின்னால் பயணித்தது. நாங்கள் செல்லும் போது எமக்கு முன்னால் குறித்த கறுப்பு நிற கெப் வண்டி சென்றது. அதன் பின்னர் குறித்த கெப்வண்டியை நான் காணவில்லை.

அப்போது நான் வந்த கெப்வண்டி மட்டக்களப்பு நோக்கி சென்று மட்டக்களப்பு கோட்டையை வந்தடைந்தது. அங்கு குறித்த கெப்வண்டி நின்றதை நான் பார்த்தேன். அப்போது லெப்டினன் கொமோட்டோ பியந்த (கொத்து பியந்த) மற்றும், என்னுடன் வந்த நால்வரும் வெளியில் இறங்கி நின்றோம்.

கோட்டையில் இருந்த பாழடைந்த அறைக்கு கறுப்பு கெப்வண்டியில் கொண்டுவரப்பட்ட நபரை அதில் வந்தவர்கள் இழுத்து சென்றதை நான் பார்த்தேன். அதன் பின்னர் துப்பாக்கி வேட்டுச் சத்தம் அந்த அறையில் இருந்து எனக்கு கேட்டது.

சில நிமிடங்களின் பின்னர் கொமோட்டோ பியந்த கோட்டையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திர படகை எடுக்குமாறு சொன்னார். அங்கு மூன்று இந்திர படகுகள் காணப்பட்டது.

அவர் காட்டிய படகை நான் இயக்கிய நிலையில் வைத்திருந்த போது சுட்டுக் கொள்ளப்பட்ட அந்த நபரை துக்கி வந்து படகில் வைத்தனர். அப்போது நான் பார்த்ததில் அவரின் கழுத்தில் சூட்டு காயங்கள் காணப்பட்டது.

பின்னர் என்னை அருகில் இருந்த தீவை நோக்கி படகை செலுத்த சொன்னார்கள். படகில் மண்வெடிகளும் இருந்தது. என்னை படகில் இருக்க சொல்லிவிட்டு சடலத்தை தூக்கி சென்று சில நிமிடங்களில் திரும்பி வந்தனர்.

பின்னர் நாங்கள் வந்த கெப் வண்டியில் திரும்பி வந்து விட்டோம். பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியான பின்னரே எனக்கு தெரியவந்தது. அதன் பின்னரே நான் பார்த்த மற்றும் சுட்டுக் கொள்ளப்பட்ட நபர் எக்னெலிகொட என அறிந்து கொண்டேன்” என கூறியுள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், செட்டிக்குளம்

11 Feb, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொழும்பு, ஹம்பகா, ஜா-யல, நீர்கொழும்பு

09 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரந்தன், Chur, Switzerland, Markham, Canada

21 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026