யாழில் விபத்தில் சிக்கிய முதியவருக்கு நேர்ந்த கதி!
யாழில் விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மட்டுவில் கிழக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த அருணாசலம் சத்தியசீலன் (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கனகம் புளியடி வீதியில் இருந்து புத்தூர் சந்தியூடாக நேற்று பின்னேரம் துவிச்சக்கர வண்டியில் கோயிலுக்கு சென்றுள்ளார்.
இதன்போது, மெய்கண்டான் சந்திக்கு அண்மித்த பகுதியில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவ இடத்திலேயே அவர் மயக்கமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இது குறித்து விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |