வயலுக்குள் பாய்ந்தது முச்சக்கரவண்டி : பயணித்த மூதாட்டிக்கு நேர்ந்த துயரம்
Trincomalee
Sri Lanka Police Investigation
Accident
Death
By H. A. Roshan
திருகோணமல தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட 96ம் கட்டை பகுதியில் முச்சக்கரவண்டி வயலுக்குள் குடை சாய்ந்ததில் அதில் பயணித்த வயோதிப பெண் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(29) இடம் பெற்றுள்ளது இதில் (வயது 67)உடைய 99ம் கட்டையை சேர்ந்த வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
99ம் கட்டையில் இருந்து 10ம் கொலனிக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.இதில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் பயணித்துள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம்
முச்சக்கர வண்டி சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வருகிறது.

இதன் போது சாரதி உட்பட இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி