மின் கட்டணத்தை உயர்த்த மின்சார சபை கோரிக்கை!! அமைச்சர் கொடுத்த பதிலடி
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டங்களுக்கு இலங்கை மின்சாரசபை ஒத்துழைக்காததால் மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனையை தான் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப் போவதில்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.
இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மின்சார கட்டணத்தை 300 வீதமாக உயர்த்த வேண்டும் என மின்சார சபை கோரிக்கை விடுத்தமையை அடுத்து அமைச்சர் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.
சம்பளத்தை மாத்திரம் அதிகரித்துக் கொள்கின்றனர்
குறித்த பதிவில் "இலங்கை மின்சார சபையினர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களைத் தொடர அனுமதிக்க வேண்டும் மற்றும் உற்பத்திச் செலவுகளைக் குறைக்க வேண்டும், மாறாக தங்கள் சொந்த சம்பளத்தை மாத்திரம் அதிகரித்துக் கொள்கின்றனர்.
மூன்று வருடங்களுக்கு ஒருமுறை அவர்களது சம்பளம் 25% அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபை கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அல்லது உற்பத்தியில் செலவுக் குறைப்புக்கான திட்டங்கள் எதுவும் இல்லாததால், அவர்களின் சம்பளம் மற்றும் உற்பத்தி செலவுகள் நுகர்வோர் மீது வைக்கப்படுகின்றது" என அமைச்சர் மேலும் தனது குறிப்பிட்டார்.
2) CEB has a collective agreement that every 3 years their own salaries are increased by 25%. With no plans for renewable energy or cost reduction in generation the high cost of salaries and generation costs are put on the consumers. This has to change and no better time to do it
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 8, 2022