புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி மையமாக மாறும் வடபகுதி
"2030ஆம் ஆண்டிற்குள் சிறிலங்காவின் மொத்த மின் உற்பத்தியில் 70% ஆனது புதுப்பிக்கக் கூடிய சக்தி வளங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட வேண்டும்'' என்ற இலக்கினை நோக்கி சிறிலங்கா செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இலக்கினை அடைவதற்காக சிறிலங்காவின் வடகரையில் மீன்பிடிக் கைத்தொழிலிற்கு பெயர் பெற்ற மன்னார் பிரதேசமே தற்போது புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி மையமாக மாறியுள்ளது.
இத்திட்டத்திற்காக மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டுள்ள இந்திய நிறுவனமான அதானி, 480 மெகாவாட் மின்சாரத் திட்டங்களை செயற்படுத்தவுள்ளது.
மன்னார் மற்றும் பூநகரி பகுதிகள்
இத்திட்டத்திற்காக மன்னார் மற்றும் பூநகரி பகுதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர, மன்னாரில் கட்டப்பட்ட சிறிலங்காவின் மிகப்பெரிய காற்றாலை மின் நிலையமான தம்பவனி மின் உற்பத்தி நிலையம் இப்போது வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.
அதிகளவு காற்று வீசக்கூடிய இடம்
103.5 MW மெகாவோட் திறன் கொண்ட இந்த ஆலையில் இருந்து தற்போது 404 GW ஜிகாவோட் மின்சாரம் ஆண்டு கொள்ளளவாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.
புவியியல் ரீதியாக இயற்கையாகவே அதிகளவு காற்று வீசக்கூடிய இடமாக மன்னார் கண்டறியப்பட்டுள்ளது. இதனாலேயே மின் உற்பத்திக்கான எதிர்கால இலக்க்கினை எட்ட பொருத்தமான இடமாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.