நாட்டை உலுக்கிய கோர விபத்து - விபத்துக்குள்ளான பேருந்து தொடர்பில் பிரதி அமைச்சர் அதிர்ச்சி தகவல்
புதிய இணைப்பு
எல்ல - வெல்லவாய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தானது, 2023 ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பதிவு நீக்கம் செய்யப்பட்ட பேருந்து என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த தங்காலை நகரசபை பணியாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து 500 அடி பள்ளத்தில் கவிழந்து பாரிய விபத்தை ஏற்பட்டிருந்தது.
இந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வீதி பாதுகாப்பு குறித்த திட்டத்தில் இணைக்கப்பட்ட போக்குவரத்து மருத்துவ சபை மற்றும் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் குழுவும் இன்று எல்ல பகுதிக்குச் சென்று விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வும் செய்யும் எனவும் போக்குவரத்து பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
எல்ல - வெல்லவாய வீதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதிக்கு பொது மக்களை வேடிக்கை பார்க்க வர வேண்டாம் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த கோர விபத்து நேற்று இரவு (4) எல்ல - வெல்லவாய வீதியின் 24 ஆவது மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
வேடிக்கை பார்க்க வர வேண்டாம்
விபத்தில் இறந்தவர்களில் 9 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஐந்து குழந்தைகள் உட்பட பதினொரு ஆண்கள் மற்றும் ஏழு பெண்களும் அடங்குவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பொது மக்களை வேடிக்கை பார்க்க வர வேண்டாம் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
