நெதன்யாகுவிடம் இருந்து மோடிக்கு பறந்த அவசர அழைப்பு
இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் (Benjamin Netanyahu) இருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் இன்று (13) பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகுவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
நாட்டு நிலவரம்
அவர் அந்நாட்டு நிலவரம் தொடர்பாக விளக்கம் வழங்கினார்.
Received a phone call from PM @netanyahu of Israel. He briefed me on the evolving situation. I shared India's concerns and emphasized the need for early restoration of peace and stability in the region.
— Narendra Modi (@narendramodi) June 13, 2025
எங்கள் கவலைகளை பகிர்ந்தேன்.
அதேவேளை, அந்தப் பகுதியில் விரைவில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலைநிறுத்தப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
