தீர்மானம் மிக்க இங்கிலாந்து - நியூசிலாந்து போட்டி! சிக்கலில் பாக்கிஸ்தானின் அரையிறுதி கனவு
சர்வதேச உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றில் இன்றைய தினம் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்களில் நடைபெறவுள்ள இந்த போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் அணி
இந்த தொடரில் பாகிஸ்தான் அணி, சல்மான் அலி ஆகா தலைமையில், சூப்பர் 8 சுற்றில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் மூன்றாவது இடத்தில் உள்ளது.
எனினும் பாகிஸ்தானுக்கான அரையிறுதி வாய்ப்பு குறித்த போட்டியின் முடிவிலேயே தெரிய வரும்.

தற்போதைய புள்ளிப்பட்டியல்:
இங்கிலாந்து – 4 புள்ளிகள், அரையிறுதிக்கு தகுதி பெற்றது
நியூசிலாந்து – 3 புள்ளிகள்
பாகிஸ்தான் – 1 புள்ளி
இந்த போட்டியில் நியூசிலாந்து வென்றால், அந்த அணிக்கு மொத்தமாக 5 புள்ளிகளுக்கு உயரும்.
பாகிஸ்தான் அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் அதிகபட்சமாக 3 புள்ளிகளை மட்டுமே சேர்க்க முடியும். இதனால் பாகிஸ்தான் தொடரை விட்டு வெளியேறும்.
அரையிறுதிக்கு வாய்ப்பு
இதனால் அரையிறுதிக்கு பாக்கிஸ்தான் அணி முன்னேற வேண்டும் என்றால் இங்கிலாந்து நியூசிலாந்தை தோற்கடிக்க வேண்டும்.

பின்னர் பாகிஸ்தான் இலங்கையை வீழ்த்தி 3 புள்ளிகளை பெற வேண்டும்.
ஆனால் ஊட்ட நிகர சராசரி என்பது பெரிய சவால்.
இதில் நியூசிலாந்து +3.050 புள்ளிகளுடனும், பாகிஸ்தான் -0.461புள்ளிகளுடனும் காணப்படுகின்றன.
அதனால், இங்கிலாந்து நியூசிலாந்தை பெரிய ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.
மேலும், பாகிஸ்தான் இலங்கைக்கு எதிரான போட்டியில் மிக வலிமையான வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும்.
இங்கிலாந்து அணியின் நோக்கம், முதன்மை வெற்றி மூலம் அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணியுடன் எதிர்கொள்ள வேண்டிய சூழலைத் தவிர்க்க வேண்டும்.
இதனால் இங்கிலாந்து நியூசிலாந்தை தோற்கடிக்க முழுமையான முயற்சி செய்யக்கூடும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |