தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களின் ஆறாம் வகுப்புக்கான விண்ணப்பங்களை அதிபர்கள் இணையவழியில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது, இன்று(03) கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் சமர்பிக்கப்படவேண்டிய திகதிகள் மற்றும் வழிமுறைகள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
56,000 மாணவர்கள் சித்தி
2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் நேற்றையதினம் வெளியாகியிருந்தது.

அதன்போது, குறித்தப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 56,000 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் பரீட்சைக்கு 294,132 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 289,867 பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |