முழுமையாகக் கணனி மயப்படுத்தப்படவுள்ள இலங்கை பரீட்சைத் திணைக்களம்
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக விரிவான கணனி வலையமைப்பு திட்டமொன்றை நிறுவுவதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த முன்மொழிவுக்கே இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.
இலங்கை பரீட்சைத் திணைக்களம் தேசிய பரீட்சைகள் உட்பட வருடத்திற்கு 300க்கும் மேற்பட்ட பரீட்சைகளை நடாத்துகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பரீட்சை செயற்பாடுகள்
எனினும், திணைக்களத்தின் தொழில்நுட்பப் பணிகள் ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியான கணினி அமைப்புகளாகக் காணப்படுவதால், பரீட்சை செயற்பாடுகளில் பெரும்பாலான அத்தியாவசியப் பணிகள் மனித வளத்தைக் கொண்டே மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அத்துடன், தரவுகள் மற்றும் பதிவேடுகள் பொதிகளாகப் பிரிவுகளுக்கு இடையே மாற்றப்படுவதால், பரீட்சை முடிவுகள் தாமதமடைதல், தவறுகள் ஏற்படுதல், பொதிகள் மற்றும் மனித வளங்கள் வீணடிக்கப்படுதல் போன்ற குறைபாடுகள் இனங்காணப்பட்டுள்ளன.
தற்போது அரச துறையில் டிஜிட்டல் மயமாக்கல் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பரீட்சைத் திணைக்களத்தின் கணினி வலையமைப்பு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமானது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய, பரீட்சைத் திணைக்களத்தின் பணிகளை மிகவும் துரிதமாகவும், துல்லியமாகவும், திறமையாகவும் மாற்றுவதற்காக இந்த நவீன கணினிமயமாக்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 9 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்