இலங்கையில் 90 வீதமானவர்கள் கள்வர்களாம்

Puttalam Gold Sonnalum Kuttram ali sabri raheem
By Vanan May 29, 2023 10:44 AM GMT
Report

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கடந்த செவ்வாய்க்கிழமை (23) டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவு தங்கத்துடன் கைது செய்யப்பட்டார்.

அன்றைய தினம், 91 ஸ்மார்ட்போன்கள் அடங்கிய 70 மில்லியன் ரூபா பொருட்களுடன், மொத்தம் 3.5 கிலோ எடையுள்ள அறிவிக்கப்படாத தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கும் வருவாய் பணிப் படை (RTF) இயக்குனரகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கடத்தல் வழக்கில் பிடிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கடந்த வருடம்(2022)மே மாதம் வெளியிட்ட காணொலியொன்று தற்போது சமூக வலைத்தளதில் வைரலாகி வருகிறது.

90 வீதமானவர்கள் கள்வர்களே


அக்காணொலியில் ரஹீம் தெரிவித்ததாவது, “குறிப்பிட்ட ஒருவரை கள்ளன் என்று கூறுவதற்கு இந்த நாட்டில் 90 % மானோருக்கு தகுதி கிடையாது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கயவர் என்று கூறுவதற்கும் தகுதி கிடையாது.

அதுபோல முன்னைய அரசாங்கத்திலிருந்த கோட்டாபய, ரிஷாத், மகிந்த மற்றும் சஜித் ஆகியோரை கள்ளர் என்று கூறுபவர்களும் கள்ளர்களே.

அதுபோல, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றம் வருவதற்கு முன்னிருந்த நிலையும், நாடாளுமன்றத்திற்கு வந்த பின் இருக்கும் நிலையையும் பார்க்கும் போது இப்போதுதான் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்.

மக்களும் கள்ளர். அரசியல்வாதிகளும் கள்ளர். இதுதான் யதார்த்தம்” எனப் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கருத்து வெளியிட்ட அலி சப்ரி ரஹீம் தற்போது தானே கடத்தல் வழக்கில் பிடிப்பட்டுள்ளார்.

இந்தக் கருத்துக்காக இலங்கை மக்களிடம் ரஹீம் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என விமர்னங்கள் முன்வைக்கப்பட்டு வரும்நிலையில், அலி சப்ரி ரஹீமின் பதில் என்ன?

தங்க கடத்தல் தொடர்பாக ரஹீம் குறிப்பிடுகையில்

இலங்கையில் 90 வீதமானவர்கள் கள்வர்களாம் | Exclusive Aly Sabry Raheem

 “நான் தங்கம் கடத்தவில்லை. என்னுடன் வந்த மிராஜ் என்பரே தங்கம் கடத்தினார். அவர் எனக்கு விசுவாசமானவர்.

டுபாயில் இருந்து வருவதற்கான தயார்ப்படுத்தல்களை செய்யும் போது அவர்தான் என்னுடைய பைகளையும் கட்டினார்.

அப்போதுதான் இவ்வாறான வேலையை செய்திருக்கிறார். இது நான் முற்றிலும் எதிர்பார்காத ஒரு நம்பிக்கை துரோகம் .

அவரை நம்பியது என்னுடைய தவறு. அதனால் தான் தண்டபணம் செலுத்தினேன்” எனக் கூறியுள்ளார்.

இவர் இவ்வாறு கூறினாலும்,  நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அலி சப்ரி ரஹீமை பதவி விலகுமாறு கோருவதற்கான தீர்மானத்தை கொண்டு வருவது தொடர்பில், நாடாளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழு கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016