ஐ.நா முன்றலில் இடம்பெறவுள்ள கண்காட்சியும் கவனயீர்ப்பும்(photo)
srilanka
china
united nation
exhibition
By Sumithiran
சுவிஸ் தமிழர் செயற்பாட்டு அமைப்பு மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை இணைந்து நடத்தும் ‘சீனாவின் உதவியோடு சிறிலங்காவில் தொடரும் தமிழர்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்துங்கள்’ என்ற கோஷத்துடன் கண்காட்சியும் கவனயீர்ப்பும் ஐ.நா முன்றலில் நடைபெறவுள்ளது.
கண்காட்சியானது எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் முதலாம் திகதி வரை காலை 9 மணி முதல் மாலை 18 மணிவரை நடைபெறவுள்ளது.
அதேபோன்று கவனயீர்ப்பு எதிர்வரும் முதலாம் திகதி மாலை 14 மணிமுதல் 18 மணிவரை நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.