நீதிமன்ற உத்தரவை எதிர்த்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம்
2021 ஆம் ஆண்டு கொழும்பு கடற்பரப்பில் பேரழிவை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம், இலங்கை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஆட்சேபித்துள்ளது.
அதன்படி, கப்பல் பேரழிவுக்கு 1 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும் என்ற உத்தரவையே இவ்வாறு குறித்த கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பு நியாயமற்றது எனவும் உலகளாவிய கப்பல் போக்குவரத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவும் அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பு: சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு கஜேந்திரன் இரங்கல்
எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற சரக்குக் கப்பல்
மேலும் கப்பலின் தலைவரையும், நிறுவனத்தின் உள்ளூர் முகவர்களையும் விசாரணைகள் முடிவதற்கு முன்பே நீதிமன்றம் தண்டித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே சுற்றுச்சூழலுக்கும் இலங்கையின் பொருளாதாரத்துக்கும் உதவும் நியாயமான முடிவுகளை வழங்குமாறு கப்பல் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
2021ஆம் ஆண்டு எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற சரக்குக் கப்பல் தீப்பிடித்து கொழும்புக்கு அருகே மூழ்கியது, இதனால் பிளாஸ்டிக் துகள்கள் சிதறி இலங்கையில் மிக மோசமான கடல் மாசுபாடு ஏற்பட்டது.
இதனையடுத்து எக்ஸ்பிரஸ் ஃபீடர்ஸ் நிறுவனம் ஏற்கனவே சுத்தம் செய்வதற்கும் கடற்றொழிலாளர்களுக்கு உதவுவதற்கும் 150 மில்லியன் டொலருக்கும் அதிகமாக செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
