இருபது வருடங்களின் பின்னர் சிக்கிய போலி வைத்தியர்
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
சுமார் இரண்டு தசாப்தங்களாக வைத்தியரென போலியாக தொழில் புரிந்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ - எகொட உயன பிரதேசத்தில் நேற்று(21) குறித்த 54 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாதுவ, தெல்துவ பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், ஸ்ரீ தலருக்காராம விகாரைக்கு அருகில் சஹான சேவா என்ற மருத்துவ நிறுவனத்தை நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
உரிமம் இல்லாத மருந்துகள்
வேறொரு வைத்தியருக்க சொந்தமான இலங்கை மருத்துவ கவுன்சிலின் (SLMC) பதிவு எண்ணை மோசடியாகப் பயன்படுத்தி அவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளில் அந்த நிறுவனத்தில் உரிமம் இல்லாத மருந்துகள் கையிருப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
