மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்க மோசடி! மதுக்கடையில் சிக்கிய சந்தேகநபர்
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்ந சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தங்க ஆபரணங்கள் என வங்கியில் அடகு வைத்து பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்த குறித்த நபர் 9 மாதங்களின் பின்னர் நேற்று வியாழக்கிழமை (04.06.2026) கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஆபரணங்களை தயாரிக்கும் உபகரணங்கள் மீட்டுள்ளதாக மட்டு. தலைமையக காவல்துறை அறிவித்துள்ளது.
வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆபரணம் போலியானது
இது குறித்து தெரியவருவதாவது,
“மட்டக்களப்பு நகரில் தனியார் வங்கி ஒன்றில் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் போலி தங்க ஆபரணங்களை பெண் ஒருவர் அடகு வைத்து பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

அதன் பின்னர் குறித்த தங்க ஆபரணம் போலியானது என சோதனையில் வங்கி அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு தங்க ஆபரணங்களை அடகு வைத்த வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் போலி தங்க ஆபரணங்களை அவரது கணவர் வடிவமைத்து வருவதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், அவர் பின்னர் பிணை அனுமதியில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், தலைமறைவாக இருந்த குறித்த நபர் சுமார் 9 மாதங்களுக்கு பின்னர் மதுபான கடை ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவ தினமான நேற்று குறித்த மதுபானம் அருந்தும் கடையை முற்றுகையிட்டு கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் 45 வயதுடையவர் எனவும் தங்க ஆபரணங்கள் வடிவமைப்பு செய்து வந்துள்ளதாகவும் தெரிவித்த காவல்துறை அவரிடம் இருந்து தங்க ஆபரணங்களை வடிவமைக்கும் உபகரணங்களை மீட்டதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |