தவெகவினர் வெளியிட்ட வீடியோ ஏ.ஐ. - விஜய்க்கு எதிராக கதறும் டிடிவி தினகரன்
புதிய இணைப்பு
காமராஜ் கையெழுத்திட்டதாக கூறி தவெகவினர் வெளியிட்ட வீடியோ ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என சென்னை அடையாறில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
காமராஜ் கையெழுத்திட்டதாக வெளியான வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? காமராஜ் கையெழுத்திடுவது போன்ற வீடியோவை எடுத்தது யார்? விஜய்யா, ஆனந்தா, செங்கோட்டையனா? அந்த வீடியோ ஏஐ ஆக கூட இருக்கலாம்.
ஏஐ மூலம் என்ன வேண்டுமானாலும் உருவாக்கலாம். நகல் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தபோது, அசல் கடிதம் எங்கே என அவர் கேட்டிருக்கிறார். அதற்கு தவெகவினர் தருவதாக சொல்லிவிட்டு வந்துவிட்டனர். அது மோசடி வீடியோ என ஆளுநரிடம் கூறிவிட்டோம் என்றார்.
முதலாம் இணைப்பு
தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அமமுக பெயரில் போலி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் காவல் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவ்க்கின்றன.
அத்துடன் நான் அதிமுக கூட்டணிக்கு மட்டுமே ஆதரவு அளிக்கிறேன். விஜய்க்கு ஆதரவு அளிக்கவில்லை" என்று எம்.எல்.ஏ காமராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிய வருகையில், தவெக தலைவர் விஜய் நேற்று இரவு ஆளுநர் அர்லேகரை சந்தித்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஆட்சி அமைக்க ஆதரவு
அப்போது அமமுக எம்.எல்.ஏ. காமராஜ், விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளதாக கடிதம் ஒன்றும் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து ஆளுநர் மாளிகைக்கு உடனே விரைந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆளுநர் அர்லேகரை சந்தித்தார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துதான் தமது கட்சி எம்.எல்.ஏ. காமராஜ் தம்மிடம் கடிதம் கொடுத்துள்ளார்.
#WATCH | TVK shares a video of AMMK MLA Kamaraj, saying "These are the video visuals of AMMK MLA Kamaraj voluntarily and happily writing a letter expressing his support for the Tamilaga Vettri Kazhagam. He had stated that he was extending support to the Tamilaga Vettri Kazhagam… pic.twitter.com/sM3xtyXx12
— ANI (@ANI) May 8, 2026
ஆளுநரிடம் தமது கட்சி எம்.எல்.ஏ. காமராஜ் பெயரில் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தந்துள்ளதாக கொடுக்கப்பட்ட கடிதம் போலியானது என புகார் தெரிவித்திருந்தார்.
இதனையே செய்தியாளர்களிடமும் டிடிவி தினகரன் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து ஆளுநர் மாளிகை வளாகத்தில் டிடிவி தினகரன், காமராஜ் எம்.எல்.ஏ. இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
போலியாக எனது பெயரில் கடிதம்
அப்போது ஆளுநரிடம் காமராஜ் எம்.எல்.ஏ. கொடுத்த புகார் கடிதத்தை டிடிவி தினகரன் வாசித்தார். அந்த புகாரில் “மன்னார்குடி தொகுதியிலிருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நான் காமராஜ், தந்தை பெயர் சௌந்தரராஜன். தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நான் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக ஒரு கடிதம் வாட்ஸ்அப்பில் உலா வருவதாக என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
[5PSV3Y ]
ஆனால், நான் அத்தகைய ஆதரவு கடிதம் எதையும் வழங்கவில்லை. அந்தக் கடிதம் எனது அனுமதி இன்றி பரப்பப்படுகிறது.
நானும் எனது கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் இணைந்து, தமிழகத்தில் புதிய அரசு அமைக்க எடப்பாடி கே. பழனிசாமிக்கு எங்களது கட்சியின் அதிகாரப்பூர்வ லெட்டர் ஹெட்டில் ஏற்கனவே ஆதரவுக் கடிதம் வழங்கியுள்ளோம்.
08-05-2026 அன்று அந்த ஆதரவு கடிதத்தை அளித்துள்ளோம். எனவே, ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அந்த கடிதத்தையே நான் இப்போதும் உறுதியாகப் பின்பற்றுகிறேன்.
யாரோ போலியாக எனது பெயரில் கடிதம் தயாரித்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளனர். அது குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என காமராஜ் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |