சிக்கப்போகும் முன்னாள் அமைச்சர்களின் பத்து மகன்கள் : கலக்கத்தில் கொழும்பு அரசியல் களம்
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட பல புலனாய்வு அமைப்புகள், இலஞ்சம் மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்களின் பத்து மகன்கள் மீது விசாரணையைத் தொடங்கியுள்ளன.
மேலும், பாதாள உலகத்துடன் தொடர்பு கொண்டிருந்த அமைச்சர்களின் பல மகன்கள் மீதும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கொழும்புஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
ஏற்கனவே மூன்று மகன்கள் கைது
இவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகளின் மூன்று மகன்கள், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் பாதாள உலகத்துடனான தொடர்புகள் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில், முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சவின் மகனான ரகித ராஜபக்ச, இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
கோட்டாக்கு எதிராக CIDயில் முறைப்பாடு: வரலாற்று சிறப்புமிக்க விகாரையில் அரிய இரத்தினக்கற்கள் திருட்டு
தந்தையரின் அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல்
முந்தைய அரசாங்கங்களின் போது, பல அமைச்சர்களின் மகன்கள் தங்கள் தந்தையரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்வேறு ஊழல்களையும் முறைகேடுகளையும் செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சில சம்பவங்களில் முன்னாள் அமைச்சர்களின் தந்தையர்கள் நேரடியாக உதவியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்படி, இந்த முன்னாள் அமைச்சர்களிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. இந்த நபர்கள் குறித்து மேலும் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னரே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
முன்னாள் அமைச்சர்களின் உறவினர்களுக்கு எதிராகவும் விசாரணை
முன்னாள் அமைச்சர்களான தங்கள் தந்தையரின் ஆதரவுடன் பல்வேறு பதவிகளில் பணியாற்றியபோது, சில அமைச்சர்களின் மகன்கள் பல்வேறு ஊழல்களையும் முறைகேடுகளையும் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலதிகமாக, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான முன்னாள் அமைச்சர்களின் உறவினர்கள் குழுவிற்கு எதிராகவும் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்