முதலாம் தர மாணவர் அனுமதியில் வீழ்ச்சி – புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி தகவல்
நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக முதலாம் ஆண்டுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
குறித்த விபரம் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கைகளின் (2023-2025) தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் அரச பாடசாலைகளில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
ஆரம்பக் கட்ட அனுமதி
2023 ஆம் ஆண்டில் 3,882,688 ஆக இருந்த மொத்த மாணவர் எண்ணிக்கை, 2024 இல் 3,816,234 ஆகவும், 2025 இல் 3,747,544 ஆகவும் குறைந்துள்ளது.

இது 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் சுமார் 3.48 சதவீத ஒட்டுமொத்த வீழ்ச்சியாகும். பாலின ரீதியாகப் பார்க்கும்போது, மாணவர்களின் விகிதம் 49.5% ஆகவும் மாணவிகளின் விகிதம் 50.5% ஆகவும் அனைத்து ஆண்டுகளிலும் நிலையாகக் காணப்படுகிறது.
முதலாம் தர அனுமதி - ஒரு பெரும் சரிவு பாடசாலைகளின் ஆரம்பக் கட்ட அனுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
2023 இல் 287,639 ஆக இருந்த முதலாம் தர மாணவர் சேர்க்கை, 2025 இல் 266,281 ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 7.42 சதவீத பாரிய வீழ்ச்சியாகும்.
குறிப்பாக, மாகாணப் பாடசாலைகளில் முதலாம் தர அனுமதி 260,845 இலிருந்து 239,714 ஆகக் குறைந்துள்ளது.
மாவட்ட ரீதியிலான மாணவர் அனுமதி மாற்றங்கள் அதிக மாணவர் சனத்தொகையைக் கொண்ட மாவட்டங்களில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதைக் காணமுடிகிறது.
சனத்தொகை
கொழும்பு மாவட்டம்: 2023 இல் 325,525 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை, 2025 இல் 305,506 ஆகக் குறைந்துள்ளது, இது சுமார் 6.15 வீத வீழ்ச்சியாகும். கம்பஹா மாவட்டம்: 317,617 இலிருந்து 297,307 ஆக மாணவர் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.

கண்டி மாவட்டம்: 2023 இல் 263,951 ஆக இருந்த மாணவர்கள், 2025 இல் 252,916 ஆகக் குறைந்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டம்: இங்கு மாணவர் எண்ணிக்கை 95,176 இலிருந்து 93,167 ஆகக் குறைந்துள்ளது (சுமார் 2.1 வீத வீழ்ச்சி).
மட்டக்களப்பு மாவட்டம்: 117,514 இலிருந்து 117,172 ஆக மாணவர் எண்ணிக்கை மிகச் சிறிய அளவில் குறைந்துள்ளது.
திருகோணமலை மாவட்டம்: 93,482 இலிருந்து 93,481 ஆக மாணவர் எண்ணிக்கை ஏறத்தாழ நிலையாக உள்ளது. மொழி மூல ரீதியிலான மாணவர் சனத்தொகை சிங்கள மொழி மூலம்: மாணவர்களின் எண்ணிக்கை 2,827,538 இலிருந்து (2023) 2,692,039 (2025) ஆகக் குறைந்துள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கை
தமிழ் மொழி மூலம்: மாணவர் எண்ணிக்கை 934,579 இலிருந்து 913,364 ஆகக் குறைந்துள்ளது. இருமொழி மற்றும் ஆங்கில மூலம்: ஒட்டுமொத்த மாணவர் எண்ணிக்கை குறைந்தாலும், ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கொண்டு கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 120,571 (2023) இலிருந்து 142,141 (2025) ஆக 17.9 வீத வளர்ச்சி கண்டுள்ளது.

பாடசாலை வகைகளின் அடிப்படையில் மாணவர் பரம்பல் உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவு உள்ள 1ஏபி பாடசாலைகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 1,544,233 இலிருந்து (2023) 1,549,882 (2025) ஆக ஒரு சிறிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதேசமயம், தரம் 5 வரையான ஆரம்பப் பாடசாலைகளில் (வகை 3) மாணவர் எண்ணிக்கை 611,427 இலிருந்து 580,649 ஆகக் குறைந்துள்ளது.
இலங்கையின் கல்வித்துறையில் மொத்த மாணவர் அனுமதி மற்றும் முதலாம் தரச் சேர்க்கை ஆகியவை மாவட்ட ரீதியாகப் பரவலாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், ஆங்கில மொழி மூலக் கல்வி மற்றும் உயர்தர விஞ்ஞானப் பாடப்பிரிவுகளைக் கொண்ட 1ஏபி பாடசாலைகளில் மாணவர்களின் ஆர்வம் அல்லது அனுமதி முன்னரை விட சற்று அதிகரித்துள்ளது அல்லது நிலையாக உள்ளது எனலாம்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |