மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்..!
Vavuniya
Sri Lanka Police Investigation
Death
By Independent Writer
Courtesy: kapil
வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று(18) மதியம் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்
மரம்வெட்டும் தொழிலை மேற்கொள்கின்ற குறித்த நபர் இன்றையதினம் நொச்சிமோட்டை பகுதியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தவறுதலாக மரத்தில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார்.
ஓமந்தை காவல்துறையினர் விசாரணை
படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் முன்னரே மரணமடைந்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் ஓமந்தை பகுதியை சேர்ந்த குமார் (வயது 45) என்ற குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்