குழு மோதலில் குடும்பஸ்தர் கொலை: தெமோதரயில் பயங்கரம்
இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது எல்ல (Ella) காவல்துறை பிரிவிற்குட்பட்ட தெமோதர - நெதர்வில் பகுதியில் நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினரின் விசாரணை
இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த வாக்குவாதம் நேற்று இரவு மோதலாக மாறியது என்று காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இருவரிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேத பரிசோதனை
உயிரிழந்தவரின் சடலம் தெமோதர கிராமிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நீதிவான் பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்குச் சடலம் எடுத்துச் செல்லப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
