வைத்தியசாலையிலிருந்து காணாமல் போன தந்தை - மகன் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை
காணாமல் போன தனது தந்தையை மீட்டுத்தாருங்கள் என பொலிஸ் சாஜன்டின் மகன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொத்மலை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சாஜன்டாக கடமையாற்றி வந்த சுப்பையா இளங்கோவன் சுகயீனம் காரணமாக கடந்த 08 ஆம் திகதி கம்பளை மாவட்ட வைத்தியசாலையில் உறவினர்களினால் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினமே வைத்தியசாலையிலிருந்து காணாமல் போயுள்ளர்.
இதனையடுத்து கம்பளை பொலிஸ் நிலையத்தில் உறவினர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற போதும் இதுவரையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டவில்லை எனவும் நான்கு நாட்களாக தேடப்பட்டு வரும் தனது தந்தையை மீட்டுத்தாருங்கள் எனவும் மூத்த மகனான இளங்கோவன் அபிநாத் தெரிவித்தார்.
நோட்டன் ஒஸ் போன் தோட்டத்தை பிறப்பிடமாகவும் தலவாக்கலை பூண்டுலோயாவை வசிப்பிடமாகவும் கொண்ட இவரது மனைவி ஆசிரியை ஆவார். மூன்று பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய செல்லையா இளங்கோவன் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சாஜன்டாக கடமையாற்றிவரும் சிறந்த கரப்பந்தாட்ட வீரராவார்.
33 வருடம் பொலிஸ் சேவையில் கடமையாற்றும் இவர் மலையக அரசியல்வாதிகளின் பாதுகாவலராகவும் கடமையாற்றியவராவார் இவர் கடந்த மாதம் 10 ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து இவர் உட்பட்ட குடும்பத்தினர் அனைவரும் சுகாதார பரிசோதகர்களினால் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டு அதன் பின்னர் மேற்கொண்ட பிசி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த 07 ஆம் திகதி திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக 08 ஆம் திகதி காலை 06 மணியளவில் 1990 அவசர அழைப்பு நோயாளர் காவு வண்டியில் கம்பளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் 10.30 மணிவரை நானும் சின்னம்மாவும் வைத்தியசாலையில் இருந்துவிட்டே வந்தோம் அதன் பின்னர் பிற்பகல் 2 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எனது தந்தை வைத்தியசாலையிலிருந்து தப்பி சென்று விட்டதாக அறிவித்தனர்.
எனது தந்தை வைத்தியசாலையிலிருந்து தப்பியோட அவசியம் இல்லை எனது தந்தையை மீட்டுத்தாருங்கள் என உருக்கமாக மூத்த மகன் இளங்கோவன் அபிநாத் கோட்டுக்கொண்டார்.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், பொலிஸ் சாஜன்ட் இளங்கோவன் நோயுற்ற நிலையில் பயம் காரணமாக நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீடுகளுக்கு சென்றிருக்கலாம் கம்பளை மற்றும் கொத்மலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.