களுத்துறை சிறைச்சாலையில் கைதியின் காதை வெட்டிய மற்றொரு கைதி
பதுளை சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரின் காதுப் பகுதியை, அங்கிருந்த மற்றொரு கைதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சக கைதியால் தாக்கப்பட்ட கைதி உடனடியாகக் களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் பாதிக்கபட்ட கைதிக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காதை வெட்டிய சக கைதி
குறித்த கைதி தற்போது காவல்துறையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மேலும் காயமடைந்த கைதி இன்று ஞாயிற்றுக்கிழமை (30.08.2026) காலை சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அதன் பின்னரே அவர் வைத்தியசாலையிலிருந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கைதிகளுக்கிடையில் இந்த பிரச்சனை வந்ததது தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |