பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று
நாட்டில் நிலவிய பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி இன்று (08) தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்வி அமைச்சில் (MOE) இன்று நடைபெறும் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ (Nalaka Kaluweva) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் 500க்கும் மேற்பட்ட பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 100,000க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை புத்தகங்கள் சேதம்
நிலச்சரிவு காரணமாக இறந்த பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிபரங்கள் இன்னும் பெறப்படவில்லை, பல மாணவர்களின் அனைத்து பாடசாலை புத்தகங்கள், பைகள் மற்றும் காலணிகள் சேதமடைந்துள்ளன.

பதுளை, அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி மற்றும் பிற பகுதிகளில் சேதமடைந்த அனைத்து பாடசாலைகளும் தற்போது திருத்தம் செய்யப்பட்டு வருவகின்றது.
பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களின் மன நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.” என தெரிவித்தார்.
இதற்கிடையில், நாட்டில் 275,000க்கும் மேற்பட்ட பாடசாலை குழந்தைகள் டித்வா சூறாவளியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |