மலையக பகுதியில் பாரிய தீப்பரவல்: கருகிய லயன் குடியிருப்புக்கள்
மலையகத்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவலில் பத்து வீடுகள் சேதமடைந்துள்ளன.
பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் உள்ள லயன் குடியிருப்பே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (25) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உடமைகள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த தீபரவலில் நான்கு வீடுகள் முற்றிலும் தீயினால் சேதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடுகளில் வசித்தவர்களின் உடமைகள் தீயில் கருகிய நிலையில், இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
தோட்ட மண்டபம்
தீப்பரவல் காரணமாக 30 பேர் தற்காலிக தோட்ட மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மின்சார கசிவு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இதில் ஏற்பட்ட சேதம் தொடர்பில் இன்னும் மதிப்பிடப்படவில்லை என பூண்டுலோயா காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

