யாழ்ப்பாணம் மணல்காடு சவுக்கம் காட்டில் பற்றியது தீ
Jaffna
Fire
By Erimalai
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு சவுக்கம் காட்டில் இன்று(30) பிற்பகல் தீபரவல் ஏற்பட்டிருந்தது
அதனை கட்டுப்படுத்துவதற்கு பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் அறிவுறுத்தலின் பேரில் உபதவிசாளர் காந்தரூபன், செயலாளர் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தண்ணீர் பாய்ச்சி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த சவுக்கு மர காட்டிற்கு அடிக்கடி விஷமிகள் தீவைப்பது பல வாரங்களாக நடைபெற்று வருவதுடன் நாளாந்தம் சுமார் 50 க்கு மேற்பட்ட விறகு வியாபாரிகள் சவுக்கம் விறகுகளை வெட்டி விறகு தேவைக்காக கொண்டு செல்லப்படுவதும் குறிப்பிடதக்கது.
தீயணைப்பு பணியில் பிரதேச மக்களும் இணைவு
தீயணைப்பு பணியில் பிரதேச மக்களும் இணைந்திருந்தனர். தீ பற்றிய பகுதியை வனவள திணைக்கள அதிகாரிகளும் நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 11 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்