இந்த மாதம் வானில் நிகழவுள்ள அற்புத நிகழ்வு
2026ஆம் ஆண்டின் முதலாவது பகுதி அளவு சூரிய கிரகணம் எதிர்வரும் 17ஆம் திகதி நிகழவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது வெறும் கிரகணம் அல்ல, இது வானில் ஒரு "நெருப்பு வளையத்தை" உருவாக்கும் கண்கொள்ளாக் காட்சியாகும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்
இந்த அரிய நிகழ்வு முதன்மையாக அண்டார்டிகா கண்டத்திலுள்ள 2 அறிவியல் ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து தெளிவாகத் தெரியும்.
வானியல் நிகழ்வு
இந்த நிகழ்வானது எதிர்வரும் 17ஆம் திகதி மாலை 3.26 மணிக்கு ஆரம்பமாகி, இரவு 7.57 மணி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுமார் நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக இந்த வானியல் நிகழ்வு நீடிக்கவுள்ளது.
சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் கடந்து செல்லும்போது, சூரியனின் மையப்பகுதியை சந்திரன் மறைப்பதன் காரணமாக, சூரியன் ஒரு ஒளிவட்டம் (Ring of Fire) போன்று காட்சியளிக்கும்.
இது ஒரு பகுதி அளவு சூரிய கிரகணமாக அமைவதால், சூரியனின் ஓரப்பகுதிகள் பிரகாசமான வளையமாகத் தென்படும்.
இந்தியாவில் பார்க்க முடியாது
இந்த சூரிய கிரகணத்தை உலகின் பல நாடுகளில் அவதானிக்க முடிந்தாலும், இந்தியாவில் இதனைப் பார்க்க முடியாது என வானியல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பிட்ட சில வலயங்களில் உள்ள மக்கள் மட்டுமே இந்த இயற்கை அதிசயத்தை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுவர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |