யாழில் கடற்றொழிலுக்கு சென்றவர் திடீரென உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜோசேப் துரைராசா அன்ரனி ஜோசேப் எனும் 44 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குடும்பஸ்தருக்கு திடீர் சுகவீனம்
இது குறித்து மேலும் தெரியவருகையில், ”இன்று அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து படகுமூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற குறித்த குடும்பஸ்தருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
குறித்த குடும்பஸ்தர் தனக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தனது மனைவிக்கு தொலைபேசிமூலம் தெரிவித்து உதவிக்கு சிலரை அழைத்துள்ளார்.
இந்தநிலையில் உடனடியாக இன்னொரு படகுமூலம் தரையில் இருந்து கடலுக்கு சென்றவர்கள் குறித்த கடற்றொழிலாளரை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
குறித்த நபரை பரிசோதித்த வைத்தியர் ஏற்கனவே அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் கடற்றொழிலாளரின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 6 மணி நேரம் முன்
