குச்சவெளி துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக விசாரணை - பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் உறுதி

Indian fishermen Imran Maharoof Sri Lanka Fisherman Gun Shooting
By Thulsi Jun 04, 2025 10:09 AM GMT
Report

புதிய இணைப்பு

குச்சவெளி துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

இன்றைய (4) நாடாளுமன்ற அமர்வின் போது குச்சவெளியில் கடற்றொழிலாளர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (Imran Maharoof) எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே பிரதி அமைச்சர் இது தொடர்பாக ஆராய்ந்து விசாரணைகளை ஆரம்பிப்பதாக உறுதி அளித்தார்.

முதலாம் இணைப்பு

கடற்றொழிலாளர்கள் தீவிரவாதிகளைப் போல் நடத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (Imran Maharoof) குற்றம் சாட்டியுள்ளார்.

குச்சவெளி துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக விசாரணை - பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் உறுதி | Fisherman Shot By Sri Lankan Navy

குச்சவெளியில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடற்தொழில் திணைக்களத்தில் முறையாக சுருக்கு வலைக்கு அனுமதி பத்திரம் பெற்று கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அறிய கிடைக்கிறது.

கெஹெலியவிற்கு எதிராக எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை

கெஹெலியவிற்கு எதிராக எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை

போதைப்பொருள் கடத்துபவர்கள் போல் சோதனை

சுருக்கு வலை அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 7 மைல் நிபந்தனை திருகோணமலை போன்ற குடா பகுதிகளுக்கு பொருத்தமற்ற ஒன்று என நான் பல வருடங்களாக நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் சுட்டிக்காட்டி உள்ளேன்.

குச்சவெளி துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக விசாரணை - பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் உறுதி | Fisherman Shot By Sri Lankan Navy

இதுவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு மூல காரணம். ஹஜ்ஜு பெருநாள் நெருங்கியுள்ள இந்த நேரத்தில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் போதைப்பொருள் கடத்துபவர்கள் போல் சோதனை இட்டு அவர்களை மிரட்டுவதும் பயமுறுத்துவதுமாக இருந்த சம்பவம் இன்று துப்பாக்கி சூட்டில் முடிவடைந்துள்ளது.

கடற்றொழிலாளர்கள் தீவிரவாதிகளை போன்றே இங்கு நடத்தப்படுகின்றனர். கடற்றொழிலாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள கடற்படையினருக்கு யார் அதிகாரம் வழங்கியது? இச்சம்பவத்தில் பாதிப்படைந்த கடற்றொழிலாளர்களுக்கு நீதி வழங்க நியாயமான விசாரணை நடாத்தப்பட வேண்டும்.

இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க திருகோணமலைக்கு பொருத்தம் இல்லாத சுருக்கு வலை அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 7 மைல் நிபந்தனை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மேற்பார்வையில் செம்மணி புதைகுழி அகழ்வு - விடுக்கப்பட்ட கோரிக்கை

சர்வதேச மேற்பார்வையில் செம்மணி புதைகுழி அகழ்வு - விடுக்கப்பட்ட கோரிக்கை

அரங்கேறிய கொடூரம் - மனைவியின் தலையுடன் சரணடைந்த கணவன் - அதிர வைக்கும் வாக்குமூலம்

அரங்கேறிய கொடூரம் - மனைவியின் தலையுடன் சரணடைந்த கணவன் - அதிர வைக்கும் வாக்குமூலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்