யாழ். கடலில் மாயமான கடற்றொழிலாளர் உயிருடன் மீட்பு
செம்பியன்பற்று கடற்பகுதியில் கடற்தொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போன கடற்றொழிலாளர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளார்.
சக கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையின் மூலம் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் யாழ். வடமராட்சி கிழக்கு - செம்பியன்பற்று வடக்கு கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பெரும் பரபரப்பான சூழ்நிலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், செம்பியன்பற்று வடக்கு பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் நேற்று (ஜூன் 7) இரவு வழமை போல் கடற்தொழிலுக்குச் சென்றுள்ளார்.

எனினும், நீண்ட நேரமாகியும் அவர் கரை திரும்பாததால் அச்சமும், அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலையும் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செம்பியன்பற்று வடக்கு சென். பிலிப் நேரிஸ் கடற்தொழிலாளர் சங்கத்தினர் உடனடியாக களத்தில் இறங்கி தேடுதல் பணிகளை ஆரம்பித்தனர்.
பல மணித்தியாலங்கள் நடுக்கடலில் முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதலின் பயனாக, கரை பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த குறித்த கடற்றொழிலாளர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளார்.
செய்தி - பூ.லின்ரன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 12 மணி நேரம் முன்