கடலில் தத்தளித்த கடற்றொழிலாளர்களை அதிரடியாக மீட்ட உலங்குவானூர்தி
Sri Lankan Peoples
Sri Lanka Fisherman
Sri Lanka Air Force
By Dilakshan
பலப்பிட்டிய கடற்கரையில் கடல் கொந்தளிப்பால் சிக்கித் தவித்த மூன்று கடற்றொழில் இலங்கை விமானப்படை (SLAF) மீட்டுள்ளது.
ரத்மலானவில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து பெல் 412 உலங்குவானூர்தி மீட்புப் பணிக்காக அனுப்பப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இதன்படி, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மூவரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக விமானப்படை அறிவித்துள்ளது.
எச்சரிக்கை
பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தற்போது கடுமையான பாதகமான வானிலையை சந்தித்து வருகிறது, கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்று காரணமாக கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகங்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி