இந்திய கடற்றொழிலாளர்களின் கைது நடவடிக்கை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
கச்சத்தீவு எப்பொழுதும் இலங்கைக்குரியது (Sri Lanka) என வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் இணை தலைவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கச்சதீவு எங்களுக்குரியது மற்றும் இந்த நாடும் எங்களுக்குரியது.
தற்போதைய அரசாங்கம்
கடந்த கால அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் இந்திய (India) கடற்றொழிலாளர்களை கைது செய்வதில் அதிக அக்கறை காட்டுகின்றது.
வட மாகாணத்தை பிரதிநிதிப்படுத்தும் கடல் தொழிலில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செய்ய வேண்டி இருக்கின்றது.
நலன்களில் பாதிப்பு
இந்த அரசாங்கத்தை கொண்டு வந்ததில் எங்களுக்கு ஒரு பங்கு உண்டு, கடற்தொழில் சமூகமாகிய நாங்கள் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த நாங்கள்.
ஆகவே, கடற்றொழிலாளர்களுடடைய நலன்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த அரசாங்கம் செயற்பட வேண்டும்.
பல்வேறு பகுதிகளில் இழுவை கடறறொழில் படகு தொழில் நடைபெறுகின்றது அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
இறையாண்மை
கடல் எங்களுக்கு உரியது கச்சதீவும் எங்களுக்கு உரியது.
இந்த இறையாண்மைக்கு உட்பட்ட நாட்டில் நாங்களும் ஒரு பங்காளி என்ற வகையில், நாங்கள் இந்த கோரிக்கையை விடுகின்றோம்.
இந்திய கடற்றொழிலாளர்களின் கைது நடவடிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும், கடல் சார் திணைக்கள அதிகாரிகள் இதுவரையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடற்படையினரும் திறமையாக செயல்படுகின்றனர் அவர்கள் கடந்த கால அரசாங்கத்தை விட தற்பொழுது உள்ள அரசாங்கத்தில் மிகவும் வினை திறனுடன் செயல்படுகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 3 மணி நேரம் முன்
