ரஷ்யாவில் விடுதியில் பற்றிய தீ : வெளிநாட்டு தொழிலாளர்கள் கருகி மாண்டனர்
ரஷ்யாவின்(russia) தலைநகர் மொஸ்கோ புறநகர்ப் பகுதியான பாலாஷிகா நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், வெளிநாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்த விடுதியில் நேற்று(29) திடீரென தீப்பிடித்ததில் ஐவர் கருகி உயிரிழந்துள்ளனர்.
இந்த கட்டடத்தில் பற்றிய தீ பின்னர் மளமளவென கட்டிடத்தின் ஏனைய பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.
ஜன்னல் வழியாக குதித்தனர்
கட்டிடத்தில் தீப்பிடித்ததால் மாடியில் தங்கி இருந்த பலரும் உயிர் பயத்தில் ஜன்னல் வழியாக குதித்தனர். இதில் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டது.
தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்று தண்ணீரை பாய்ச்சி தீயை அணைக்க முயன்றனர். அவர்களது சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
சிக்கியவர்களை மீட்கும் பணி
மற்றொருபுறம் அந்த விடுதியில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. அதன்படி ஏணி மூலம் மீட்பு படையினர் ஏறிச்சென்று அங்கிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
எனினும் இந்த சம்பவத்தில் 5 பேர் உடல் கருகி பலியாகினர். சிலர் காயமடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)