உலக வரலாற்றில் பதிவான சம்பவம்- பனி ஓடுதளத்தில் தரையிறங்கிய மிகப்பெரும் விமானம்!
flight
lands
antarctica
airbus
By Kalaimathy
தென் ஆபிரிக்காவின் கேப் டவுன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மிகப்பெரிய பயணிகள் விமானம் ஒன்று அந்தாட்டிக்கா கண்டத்தில் தரையிறங்கியுள்ளது.
இதுவே உலக வரலாற்றில் முதல் முறையாக அந்தாட்டிக்கா கண்டத்தில் தரையிறங்கிய மிகப் பெரிய பயணிகள் விமானம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
A340 எயார் பஸ் ரக விமானமே பனித்துருவமான அந்தாட்டிக்கா கண்டத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்.
கேப் டவுனில் இருந்து 2 ஆயிரத்து 800 மைல் பயணித்து, 5 மணி நேர பயணத்தின் பின்னர் அந்த விமானம் பனி ஓடுத்தளத்தில் தரையிறக்கப்படடுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்