சூடுபிடிக்கும் காற்பந்து உலகக்கிண்ண களம் - காலிறுதிக்குள் நுழைந்த முதல் இரு அணிகள்
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்றுவரும் 2022 உலக காற்பந்து சுற்று இறுதி தறுவாயை எட்டி வருகின்றது.
அதற்கமைய தற்போது இரண்டவது சுற்றின் முதல் இரண்டு போட்டிகள் நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது.
காலிறுதிக்குள் நுழையும் அணியை தெரிவு செய்யும் சுற்றாக இது அமைந்துள்ளது.
ஆர்ஜன்டீனா காலிறுதிக்குள்
முதல் போட்டியில் நெதர்லாந்து அணி அமெரிக்கா அணியை 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக்க மற்றுமொரு போட்டியாக ஆர்ஜன்டீனா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுகிடையிலான போட்டி இடம்பெற்றிருந்தது.
இப்போட்டியில் ஆர்ஜன்டீனா அணி 2-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது .
இன்றைய போட்டி
இப்போட்டியில் உலகின் முன்னணி வீரரான லயனல் மெஸி மற்றும் ஜூலியன் அள்வரிஸ் இருவரும் தலா ஒவ்வொரு கோல்களை பெற்றுக்கொடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு இட்டு சென்றனர்.
மேலும் இன்றைய போட்டியாக பிரான்ஸ் மற்றும் போலந்து அணிகளும் ,இங்கிலாந்து மற்றும் செனகல் அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.