இராணுவத்தினரின் வீடுகளை சேதப்படுத்துங்கள்! தூண்டிவிட்ட முன்னாள் படை அதிகாரி
ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் வீடுகளுக்கு சேதம் விளைவிக்குமாறு சமூக ஊடகங்களில் பதிவை பதிவேற்றம் செய்து பொதுமக்களை தூண்டிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஒருவரை நிட்டம்புவ காவல்துறை கைது செய்துள்ளனர்.
லெப்டினன்டாக கடமையாற்றிய போது முறைகேடான நடத்தை காரணமாக அவர், 2020 ஜனவரி 29 ஆம் திகதி இராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
அண்மைய குழப்பத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குழுக்களுக்காக, தனது பேஸ்புக்கில் அவர் தூண்டிவிடும் பதிவுகளை பதிவிட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அவர், நிட்டம்புவ பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று அத்தனகல்லை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.