வெளிநாட்டு வேலை வாய்ப்பு : நாட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
அனைத்து கிராமங்களுக்கும் சமமான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (Sri Lanka Bureau of Foreign Employment) தலைவர் கோசல விக்ரமசிங்க (Kosala Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று (19.03.2025) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,“ வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அதிக திறமையான தொழிலாளர்களை அனுப்புவதே புதிய அரசாங்கத்தின் நோக்கம் என எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அதிக திறமையான தொழிலாளர்களை அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்குத் தேவையான நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் (Israel) அரசின் கட்டுமானத் துறையில் புதுப்பித்தல் தொடர்பான வேலைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பேர் கொண்ட முதல் குழு நேற்று இரவு (19) இலங்கையை விட்டு வெளியேரியது.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற நடைமுறைத் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தக் குழு, இந்த ஆண்டு ஜனவரியில் இஸ்ரேலுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்யப் பயன்படுத்தப்படும் லாட்டரி குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்