கேள்வி கணைகளை தொடுத்த மக்கள்: உணவகத்திற்கு சென்று உண்ணாமல் திரும்பிய இராஜாங்க அமைச்சர்
அரசாங்கத்தின் முக்கிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் மனைவியுடன் உணவகத்திற்கு சென்று மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இரவு உணவை உண்ணாமல் திரும்பியுள்ளதாக தென் இலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரின் புறநகர் பகுதியான தலவத்துகொட பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபலமான ஆடம்பர உணவகத்தில் நேற்றிரவு 9 மணியளவில் அதிகளவிலான சாதாரண மக்கள் இரவு உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
இதன் போது இரவு 10.20 மணியளவில் அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்தற்ற முக்கிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது மனைவியுடன் இரவு உணவை உண்பதற்காக உணவகத்திற்கு சென்றுள்ளார்.
இந்த அமைச்சர் தனது மனைவியுடன் உணவகத்தின் உணவு அருந்தும் பகுதிக்குள் சென்றதை கண்ட அங்கிருந்த மக்கள் திடீரென பல்வேறு கேள்வி கணைகளை தொடுக்க ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
எந்த வகையிலும் எதிர்பாராதபடி தொடர்ந்தும் மக்கள் கேள்வி கணைகளை தொடுத்தன் காரணமாக அமைச்சர் இரவு உணவை உண்ணாது மனைவியை அழைத்து கொண்டு உணவகத்தில் இருந்து வெளியேறி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.