வெளிநாட்டிலிருந்து வந்தவர் அதிகாலைவேளை கட்டுநாயக்காவில் கைது
வெளிநாடொன்றிலிருந்து வந்த இலங்கையர்(sri lanka) ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று(16) அதிகாலை 05 மணியளவில் டுபாயிலிருந்து(dubai) சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்
கைது செய்யப்பட்ட நபர் லிதுல பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர் என்பதுடன் விமானம் மூலம் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர் என தெரிவிக்கப்படுகிறது.
மதுபான போத்தல்கள் மற்றும் சிகரெட்டுகள்
இவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான மதுபான போத்தல்கள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் அடங்கிய ஒரு தொகுதியை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இவற்றை தனது பொதியில் மறைத்து கொண்டு வந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |