முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் மனித எச்சங்கள் எங்கே: சரத்பொன்சேகா கேள்வி

Sri Lanka Army United Nations Tamils Sarath Fonseka
By Thulsi Jul 16, 2024 08:40 AM GMT
Report

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றால் அவர்களின் மனித எச்சங்கள் எலும்புக்கூடுகள் எங்கே என முன்னாள் இராணுவ தளபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா (Sarath Fonseka) கேள்வி எழுப்பியுள்ளார்.

யுத்தத்தின் போது யுத்த குற்றங்கள் இழைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தின் பின்னர் சில சம்பவங்கள் இடம்பெற்றதை நிராகரிக்காத அவர் ஒரு சம்பவம் குறித்து நான் விசாரணையை ஆரம்பித்தேன் எனினும் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் விசாரணையை தொடரமுடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மூன்று சிறுமிகள் உட்பட நான்கு தமிழ் சிறுவர்களை காணவில்லை : பதறும் பெற்றோர்

மூன்று சிறுமிகள் உட்பட நான்கு தமிழ் சிறுவர்களை காணவில்லை : பதறும் பெற்றோர்

பொதுமக்களின் உயிரிழப்புகள்

இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறுதி யுத்தத்தின் போது உயிர் தப்பினார்கள். அவர்களை நான் பாதுகாப்பாக வெளியேற்றினேன்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் மனித எச்சங்கள் எங்கே: சரத்பொன்சேகா கேள்வி | Former Army Commander Sarath Fonseka Last War

முதலில் 2009 மே 19ம் திகதி வெள்ள முள்ளிவாய்க்காலில் இருந்து 150,000 பேரை மீட்டேன், யுத்தம் முடிவடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் 85000 பேரை மீட்டேன்.

நாங்கள் பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரிப்பதை தவிர்த்தோம். நாங்கள் கனரக ஆயுதங்களை ஆட்டிலறிகள் போன்றவற்றை மிகவும் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தினோம்.

இறுதிக் கட்டத்தை நெருங்கும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள்

இறுதிக் கட்டத்தை நெருங்கும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள்

கண்மூடித்தனமான தாக்குதல்

குறிப்பாக 2009 ஆம் ஆண்டின் ஐந்து மாதங்களில் அவ்வாறே போரிட்டோம். 2008ம் ஆண்டு முழுவதும் நான் 2000 படையினரை இழந்தேன்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் மனித எச்சங்கள் எங்கே: சரத்பொன்சேகா கேள்வி | Former Army Commander Sarath Fonseka Last War

ஆனால் 2009 இன் நான்கரை மாதங்களில் கட்டுப்பாட்டுடன் தாக்குதலை மேற்கொண்டதால் நான் 2000 படையினரை இழந்தேன்.

அவர்கள் அந்த சிறிய பகுதிக்குள் முற்றுகையிடபட்டிருந்தார்கள். எங்களால் ஒரு மாதத்திற்குள் அவர்களை முடித்திருக்கலாம். கண்மூடித்தனமாக பொதுமக்கள் உட்பட அனைவரின் மீதும் தாக்குதலை மேற்கொண்டிருந்தால் ஒருமாதத்திற்குள் அவர்களை முடித்திருக்கலாம்.

கொழும்பின் முக்கிய பகுதியில் மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

கொழும்பின் முக்கிய பகுதியில் மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

யுத்த குற்றச்சாட்டுகள்

ஆனால் நாங்கள் அதனை செய்யவில்லை நாங்கள் கட்டுப்பாட்டுடன் தாக்குதலை மேற்கொண்டோம்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் மனித எச்சங்கள் எங்கே: சரத்பொன்சேகா கேள்வி | Former Army Commander Sarath Fonseka Last War

நிச்சயமாக இந்த உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிபரங்கள் யுத்த குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை.

இந்த தகவல்கள் உண்மையென்றால் நீங்கள் அந்த பகுதியில் எங்கு சென்றாலும் மனித புதைகுழிகளை பார்க்க முடியாதாகயிருக்கவேண்டும் ஆனால் அவ்வாறான ஒரு சூழ்நிலை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடொன்றில் பயணப்பைகளில் மீட்கப்பட்ட இருவரின் உடற்பாகங்கள் : ஒருவர் கைது

வெளிநாடொன்றில் பயணப்பைகளில் மீட்கப்பட்ட இருவரின் உடற்பாகங்கள் : ஒருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026