சாதாரண மனிதராக இலங்கை வந்த டேவிட் கெமரூன்!
இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டுள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனின் செயற்பாடு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண பயணியாக இலங்கை வந்த பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் சாதாரண பயணியாகவே இலங்கையை விட்டு வெளியேறியுமுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
சர்வதேச அரங்கில் பலம்பொருத்திய பிரதமராக செயற்பட்டவர் டேவிட் கெமரூன், இவர் தனது மனைவியுடன் எளிமையான முறையில் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார்.
குடும்பத்துடன் வருகை

கடலில் குளித்தும், வீதி ஓரங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் உணவினை பெற்றும் சென்றுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது
இலங்கையில் சுமார் 20 நாட்கள் தங்கியிருந்த கெமரூன் குடும்பத்தினர் பல இடங்களை சுற்றிப் பார்த்துள்ளனர். உனவட்டுன, மிரிஸ்ஸ, சிகிரியா, உடவலவ, பின்னவல, திருகோணமலை போன்ற இடங்களுக்கு அவர் பயணம் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.
தன்னை அடையாளம் கண்ட ஒரே நபர் விமான நிலைய குடிவரவு அதிகாரி மாத்திரமே என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணிலுடன் சந்திப்பு

விமான நிலையத்திற்கு திரும்பும் வழியில் தனது பழைய நண்பர், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை அரை மணி நேரம் சந்தித்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது