நீதிமன்ற அவமதிப்பு : தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு கடூழியச் சிறை
2024 ஆம் ஆண்டு தரம்5 புலமைப்பரிசில் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு செய்ததற்காக, தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலகவுக்கு உச்ச நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மேலும், மூன்று மில்லியன் ரூபாய் அபராதம் விதித்த அமர்வு, அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு
தரம்05 புலமைப்பரிசில் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாகக் குற்றம் சாட்டி, பிரதிவாதி பிரேமதிலக மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

பிரதம நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |