ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு
Sri Lanka Police
Colombo
Gun Shooting
By Raghav
மீகொட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று (12.08.2025) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினராக சாந்த முதுங்கொடுவ என்பவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீகொட - ஆட்டிகல வீதியில் உந்துருளியில் சென்று கொண்டிருந்தபோது சிற்றூந்தில் வந்த மர்ம நபர்களால் அவர் சுட்டு கொள்ளப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர், ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்