முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவுக்கு பிணை
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வத்தளை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
லங்கா ச.தொ.ச நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சருக்கு பிணை வழங்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வத்தளை நீதவான் கஞ்சனா என். சில்வா முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை (24) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கு தாக்கல் பின்னணி
இதன்போது, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை 25,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 05 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

லங்கா ச.தொ.ச நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுக்கும் விசாரணைக்கு அமைவாக, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மூத்த மகன் ஜொஹான் பெர்னாண்டோ, இளைய மகன் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் ச.தொ.ச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்