புலிகளின் உளவுத்துறையின் அடிப்படையில் முன்னாள் கடற்படை தளபதி கைது : இப்படி கூறுகிறார் நாமல்
விடுதலைப் புலிகளின் உளவுத்துறையின் அடிப்படையில் முன்னாள் கடற்படைத் தளபதி கைதுசெய்யப்பட்டதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கில் நடந்த ஹர்த்தாலின் போது அரசாங்கம் தனது சொந்தக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதித்துறையை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கவேண்டும்
நீதித்துறையை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கவேண்டும்.நாடாளுமன்றத்தில் முன்னணியில் உள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட வழக்கு மற்றும் சம்பந்தப்பட்ட நபர் பற்றி முழு நாட்டிற்கும் தெரியும் என்று கூறிய அவர் நீதிபதிகளின் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களை அரசியலாக்குவதைத் தவிர்க்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
நீதிபதிகளின் இடமாற்றத்தில் அரசியல்
“நீதிபதிகளின் இடமாற்றத்தில் அரசியலைக் கொண்டு வர வேண்டாம். காவல் துறை அரசியல்மயமாக்கப்பட்டது. இராணுவத்தை அரசியல்மயமாக்க முயற்சிகள் நடக்கின்றன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
