நீண்ட நாட்களின் பின்னர் பொதுவெளிக்கு வந்த கோட்டாபய(படங்கள்)
Colombo
Gotabaya Rajapaksa
By Jaso
பொதுவெளிக்கு வருகை தராத முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச இன்று(01) கொழும்பிலுள்ள விகாரையொன்றுக்கு தனது குடும்ப சகிதம் வருகை தந்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் ஆசிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் அவரும் அவரது குடும்பத்தினரும் கொழும்பிலுள்ள கங்காராமய விகாரைக்கு வருகை தந்துள்ளனர்.
புத்தாண்டு ஆசி
இதன்போது அவரும் அவரது குடும்பத்தினரும் குறித்த விகாரையின் விகாராதிபதி கலாநிதி கிரினிதே அஸ்ஸாஜி தேரரிடம் புத்தாண்டு ஆசிகளை பெற்றுக்கொண்டனர்.

பெரமுனவின் ஆண்டுவிழாவிலும்
இதேவேளை அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் ஆண்டுவிழாவிலும் கோட்டாபய ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
images -daily mirror