தி.மு.கவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் - உச்சக்கட்ட பரபரப்பில் தேர்தல் களம்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (OPS) இன்று திமுகவில் இணைந்துள்ளார்.
ஓபிஎஸ் திமுகவில் இணைந்து உள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அவரது மகன் ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்துள்ளனர்.
அரசியல் களம் சூடு
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது.
இப்படி சூடுபிடித்துள்ள நிலையில் முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அரசியலை விட்டே விலகத் தயார்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் தை மாதத்திற்குள் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிப்பதாக கூறிவந்த ஓ.பன்னீர்செல்வம், என்னை முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கியதற்கு என்ன காரணம் என்பதை தற்போது பொறுப்பில் உள்ளவர்கள் தெரிவிக்க வேண்டும்.

நான் தவறு செய்தேன் என்று தெரிந்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பன்னீர்செல்வம், திராவிட முன்னேற்ற கழக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துக்கொண்டார்.
ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது ஆதரவாளர்களும் திராவிட முன்னேற்ற கழகத்துடன் இணைந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |